மக்கள் பங்கேற்புடனான தூய்மைப்படுத்தம் பணி 06.02.2024ம் திகதியன்று கச்சாய் துறைமுகத்தில் இருந்து எறியால்பிட்டி மயானம் வரையான பகுதி வரை மேற்கொள்ளப்பட்டது.
சாவகச்சேரி பிரதேசசபையுடன் இணைந்து கச்சாய் கலைமகள் சனசமூக நிலையமும் கச்சாய் கடற்தொழிலாளர் சங்கமும் இணைந்து முதற்கட்டமாக கச்சாய் துறைமுகத்தில் இருந்து எறியால்பிட்டி மயானம் வரையான பகுதியில் பொதுமக்களால் கொட்டப்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள், பீங்கான்கள் என்பன தரம் பிரிக்கப்பட்டு பிரதேசசபையின் கழிவகற்றல் வாகனத்தின் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டது.
