சேவைநலன் பாராட்டு விழா திரு. ஆறுமுகம் சோமஸ்கந்தமூர்த்தி

சாவகச்சேரி பிரதேச சபையில் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற திரு.ஆறுமுகம் சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் இன்று (2024.02.16)  நலன்புரிச் சங்க அங்கத்தவர்களால் சிறப்புற கௌரவிக்கப்பட்டார்.  எமது  சபையில் நியமனம் பெற்று பல பதவிகள் வகித்து தனது வாழ்க்கை காலத்தை பிரதேச சபைக்கு என அர்ப்பணித்த சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் சேவை நிறைவில்  வரணி பொது நூலகத்தில் நூலக உதவியாளராக சேவை ஆற்றினார்.இவர் ஓய்வு பெற்றுச் சென்றாலும் பிரதேச சபையின் வளர்ச்சியில் அக்கறையுள்ள இவ் அலுவலரின் ஓய்வு காலம் சிறக்கவும் நலத்துடன் வாழ்வும் வாழ்த்துகின்றது பிரதேச சபை..

வாழிய நீடூழி...