சாவகச்சேரி பிரதேச சபையின் நாவற்குழி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 24.12.2024 ம் திகதியன்று நாவற்குழி கந்தையா கனகம்மா மண்டபத்தில் எமது சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் , முன்பள்ளி சிறார்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள், சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மாணவர்களுக்கு இலவச நூலக அங்கத்துவங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் ஈடுபட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் கலை நிகழ்வுகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
