சாவகச்சேரி பிரதேச சபையும் கைதடி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியமும் இணைந்து நடாத்திய 2024ம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வு 26.03.2024 ம் திகதியன்று கைதடி அன்னை இரத்தினம் மணி மண்டபத்தில் பி.ப 2.00 அளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி.சுதாகர் கனிஸ்ரா, மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி தயாசக்தி பாலசுப்ரமணியம், அதிபர் சாவகச்சேரி மகளிர் கல்லூரி., மற்றும் கௌரவ விருந்தினர்களாக வைத்தியர் ஜெயதர்சினி சத்துருக்கன் , ஆயுர்வேத வைத்தியர் சாவகச்சேரி பிரதேசசபை, மற்றும் இ.கந்தசாமி, தலைவர் சன சமூக நிலையங்களின் ஒன்றியம், கைதடி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
இவ் நிகழ்வின் பொது சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.