வரலாற்று பின்னணி

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் வரலாற்றில் காலம் சென்ற பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா அவர்கள் உள்ளூராட்சி அமைச்சராக பணியாற்றிய காலத்திலேயே உள்ளூராட்சி மன்றங்கள் மறுமலர்ச்சி அடைந்தன. இது ஓர் வரலாற்று நிகழ்வாகும். 

சாவகச்சேரி பிரதேசசபையின் வரலாற்றில் கிராம சங்கங்களாக இருந்து சில வருட காலத்தில் இவை கிராம சபைகள் என பெயர் மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இச்சபைகளின் செயற்பாடுகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இச்சபைகளின் நிர்வாகத்தை ஒழுங்காக மேற்கொள்வதற்கு கிராமசபைக் கட்டளைச்சட்டமும் அதன் கீழ் ஆக்கப்பட்ட உபவிதிகளும் வழிவகுத்தன. உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தில் முன்னேற்றகரமான மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக  அரசாங்கம் 1980ம் ஆண்டின் 35ம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபைச் சட்டத்தின் மூலம் கிராமசபை, பட்டின சபைகளாக இயங்கிய உள்ளூராட்சி மன்றங்களை இணைத்து மாவட்ட அபிவிருத்திச்சபை என்னும் பெயரில் 1981 யூலை மாதம் முதல் செயற்படுத்த ஆரம்பித்தது.

மாவட்ட அபிவிருத்திச்சபை நிர்வாகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்தி வெற்றியளிக்காததால் 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தை அரசாங்கம் அமுலுக்கு கொண்டு வந்து இதன் மூலம் ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவினுள் அடங்கும் (1984 யூலை மாதத்திற்கு முன்னைய) கிராம சபைகள், பட்டின சபைகள் இணைக்கப்பட்டு பிரதேசசபைகள் என 01.01.19988ம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இக்காலப்பகுதியில் பிரதேசசபைக்கான தேர்தல் நடாத்தப்படாமையினால் விசேட ஆணையாளர் நியமிக்கப்பட்டு நிர்வாகம் நடாத்தப்பட்டது. 

யாழ் மாவட்டத்தில் இயங்கும் 13 பிரதேச சபைகளுள் 49 கிராம அலுவலர் பிரிவுகளையும், ஆறு உப அலுவலகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய மிகப்பெரிய பரந்த பரப்பளவினைக் கொண்டு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


சாவகச்சேரி பிரதேச சபையில் கடமையாற்றிய செயலாளர்களின் விபரம்

a
3d06f286-3309-4476-9fd7-806a0aa9be94
38f0333f-3377-4812-ba16-a1bf58a9456c
a
4a7ee18e-fc2b-40c8-b993-fc9dfa57c994
e87bdf62-454c-4fd4-aec3-a962b4759c86
44900393-d01b-4956-9149-ca681bf31569
f1ac6a3e-65a0-487b-aa10-bc67b2ad65ad
22f90f10-24e1-49d1-abb1-849ef4ca391d
5075980d-f501-42ca-8475-571ca7a0b24e