எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளிக்கு இவ்வருடம் 2025ம் ஆண்டிற்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்றைய தினம் 18.02.2025 ம் திகதியன்று முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.
எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளிக்கு இவ்வருடம் 2025ம் ஆண்டிற்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்றைய தினம் 18.02.2025 ம் திகதியன்று முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.
எமது சபையின் Best Annual Report இற்கான விருது வழங்கும் நிகழ்வு 02.12.2024 ம் திகதியன்று கொழும்பு சர்வதேஸ் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது .
எமது சபையும் Best Annual Report இற்கான விருதினை பெற்று கொண்டது.

சாவகச்சேரி பிரதேச சபையின் கச்சாய் பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 03.11.2024 ம் திகதியன்று கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றது.
எமது சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம விருந்தினராக ஓய்வு பெற்ற வைத்தியர் திருமதி. குகதாசன் சுமதி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி அதிபர் திரு.சி .பாலச்சந்திரன், கச்சாய் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.ஐ.தேவராயன் மற்றும் சாவகச்சேரி நகராட்சி மன்ற உத்தியோகத்தர் திருமதி. ஜெயந்தினி மகிந்தன் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.ஆர்.எச்.சி.ரணசிங்க அவர்களும் கலந்து கொண்டனர்.
எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளி சிறுவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வானது 19.07.2024 ம் திகதியன்று காலை 9.30 மணிக்கு முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றதுடன் எமது சபையின் செயலாளர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது
இந்நிகழ்விற்கு ஐங்கரன் சனசமூக நிலைய தலைவர், கொடிகாமம் தேசிய சேமிப்பு வங்கி உத்தியோகத்தர்கள், அல்லாரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்