ஐங்கரன் முன்பள்ளி சிறார்களின் 2025ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் நிகழ்வு -04.04.2025

எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளி சிறார்களின் 2025ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் நிகழ்வு இன்றைய தினம் 04.04.2025ம் திகதியன்று யா/ அல்லாரை அரசினர் தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது..

2776ab42-eee2-41da-bd2a-2943f59c08a7
afed256c-bd37-43bd-85a1-7ed25293ebaf

 

சாவகச்சேரி பிரதேசசபையும் கொடிகாமம் கொமர்சல் வங்கியும் இணைந்து நடாத்திய மகளிர்தின நிகழ்வு – 09.04.2025

 
சாவகச்சேரி பிரதேசசபையும் கொடிகாமம் கொமர்சல் வங்கியும் இணைந்து நடாத்திய 2025ம் ஆண்டிற்கான மகளிர் தினம் இன்றைய தினம் 09.04.2025 ம் திகதியன்று எமது சபையின் செயலாளர் திரு.க.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திருமதி.இவ்வோன் லெரிவ் லியன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திட்டமிடல்- தென்மராட்சி கல்வி வலயம் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு .அருளம்பலம் ஜெயபாலன், பிராந்திய முகாமையாளர் - கொமர்சல் வங்கி வட பிராந்தியம் மற்றும் திருமதி மயில்வாகனசிங்கம் ராஜலட்சுமி , செயற்பாடு மகிழ்வோம் இணைப்பாளரும் முன்பள்ளி மேற்பசர்வையாளரும் - தென்மராட்சி கல்வி வலயம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு.தட்சணாமூர்த்தி பிரஜீப், முகாமையாளர்- கொமர்சல் வங்கி கொடிகாமம் அவர்களும் Dr.சத்துருக்கன் ஜெயதர்சினி , Dr.கனேசமணி சங்கீதா, ஆயுர்வேத மருத்துவ் உத்த்கியோகத்தர்கள் சாவகச்சேரி பிரதேசசபை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 
இன்றைய தினம் இந்நிகழ்வில் பெண்களை உக்குவிக்கும் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கும், கச்சாய் உப அலுவலக எல்லைக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் விறு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மற்றும் தேசிய ரீதியில் செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட அல்லாரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

வள வங்கி திறப்பு விழா 03.04.2025

எமது அலுவலகத்திற்கு PHINLA செயற்றிட்டத்தின் கீழ் தரம்பிரிக்க்பப்பட்ட கழிவுகளை சேகரிப்பதற்காக வழங்கப்பட்ட வளவங்கியினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வு இன்றைய தினம் 03.04.2025 ம் திகதியன்று காலை 9.00 மணிக்கு எமது சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி டென்சியா, பிரதி பிரதம செயலாளர் செயலகம், வடக்கு மாகாண உதவி பிரதம செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.நிமால் பிறேம்திலக்க, தொழில்நுட்ப நிபுணர், PHINLA அவர்ளும் Mr.பிரகாஷ் , திட்ட முகாமையாளர், PHINLA , சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் கொடிகாமம் அவர்களும் கலந்து கொண்டதுடன் வளவங்கியின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தும் வைக்கப்பட்டது.

அத்துடன் PHINLA project Manager இனால் எமது சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வள வங்கியினை எதிர்காலத்தில் வினைத்திறன்மிக்கதாக செயற்படுத்துவதற்கான விழிப்புணர்வுகள் , ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது

 

ஐங்கரன் முன்பள்ளி மாணவர்களுக்கான காலகோள் விழா 18.02.2025 Clone

எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளிக்கு இவ்வருடம் 2025ம் ஆண்டிற்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்றைய தினம் 18.02.2025 ம் திகதியன்று  முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.  

ஐங்கரன் முன்பள்ளி மாணவர்களுக்கான காலகோள் விழா 18.02.2025

எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளிக்கு இவ்வருடம் 2025ம் ஆண்டிற்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்றைய தினம் 18.02.2025 ம் திகதியன்று  முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.  

Save a life நிறுவனமும் பொது மக்கள் பங்கேற்புடனும் மேற்கொண்ட தூய்மைப்படுத்தும் பணி 30.01.2025

சாவகச்சேரி பிரதேச சபையும், Save a life நிறுவனமும் இணைந்து பொது மக்கள் பங்கேற்புடனும் , எமது சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினதும் பங்கு பற்றலுடனும் Clean Sri Lanka திட்டத்தின் கீழ் சரசாலை குருவிக்காடு பகுதி 30.01.2025 ம் திகதியன்று சுத்தம் செய்யப்பட்டது.
பொதுமக்களால் கொட்டப்பட்ட இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள், பீங்கான்கள் என பல கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்தின் மூலம் தரம் பிரித்து அகற்றப்பட்டது.

நாவற்குழி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 24.12.2024

சாவகச்சேரி பிரதேச சபையின் நாவற்குழி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 24.12.2024 ம் திகதியன்று நாவற்குழி கந்தையா கனகம்மா மண்டபத்தில் எமது சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் , முன்பள்ளி சிறார்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள், சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மாணவர்களுக்கு இலவச நூலக அங்கத்துவங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் ஈடுபட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் கலை நிகழ்வுகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Best Annual Report இற்கான விருது வழங்கும் நிகழ்வு 02.12.2024

எமது சபையின் Best Annual Report இற்கான விருது வழங்கும் நிகழ்வு 02.12.2024 ம்  திகதியன்று கொழும்பு சர்வதேஸ் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது . எமது சபையும் Best Annual Report இற்கான விருதினை பெற்று கொண்டது.  

சரசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 05.11.2024

    சாவகச்சேரி பிரதேச சபையின் சரசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 05.11.2024 ம் திகதியன்று மட்டுவில் கமலாசினி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. எமது சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம விருந்தினராக Timko International Holdings Pvt Ltd நிறுவனத்தின் Chief Executive Officer வல்லிபுரம் தங்கராசா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பச்சிலை பள்ளி பிரதேச சபையின் செயலாளர் திருமதி.தர்சினி தயானந்தன், எமது சபையின் ஓய்வு பெற்ற முன்னாள் செயலாளர் திரு.வேலுப்பிள்ளை சிவராஜாலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கோவிலாக்கண்டி மகா லக்சுமி வித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபர் திரு.கந்தையா தேவநேசன், மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்தின் அதிபர் திரு.கிருஷ்ணசாமி சந்திரகுமார் மற்றும் மட்டுவில் கிழக்கு கிராம அலுவலர் செல்வி நாகராஜா தர்மினி அவர்களும் கலந்து கொண்டனர். பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் எமது பொது நூலகத்தின் பத்திரிக்கை வாசகர்கள் மற்றும் ஓய்வு நிலை நூலகர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு இலவச நூலக அங்கத்துவங்களும் வழங்கி வைக்கப்பட்டன. தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் ஈடுபட்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் கலை நிகழ்வுகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.    

சாவகச்சேரி பிரதேச சபையின் கச்சாய் பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 03.11.2024

  சாவகச்சேரி பிரதேச சபையின் கச்சாய் பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 03.11.2024 ம் திகதியன்று கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றது. எமது சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம விருந்தினராக ஓய்வு பெற்ற வைத்தியர் திருமதி. குகதாசன் சுமதி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி அதிபர் திரு.சி .பாலச்சந்திரன், கச்சாய் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.ஐ.தேவராயன் மற்றும் சாவகச்சேரி நகராட்சி மன்ற உத்தியோகத்தர் திருமதி. ஜெயந்தினி மகிந்தன் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.ஆர்.எச்.சி.ரணசிங்க அவர்களும் கலந்து கொண்டனர்.