உலக சுற்று சூழல் தின கொண்டாட்டம் சாவகச்சேரி பிரதேச சபை- 06.06.2024

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு முன்னிட்டு மே 31 தொடக்கம் யூன் 05 வரையான காலப்பகுதியை சுற்று சூழல் வாரமாக பிரகடனப் படுத்தப்பட்டமைக்கு அமைவாக சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லைக்குட்பட உப அலுவலக ரீதியாக ஒவ்வொரு தொனிப் பொருளின் அடிப்படையில் உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்பட்டது

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு இறுதி நிகழ்வாக இன்றைய தினம் வன ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து மரம் நடுகை செயற்றிட்டமானது சரசாலை உப அலுவலக பகுதியிலும்  வரணி மத்திய கல்லூரி அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனும் இணைந்தும் மற்றும் கண்டி வீதியிலும் எமது சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள்ஊழியர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.

</p dir="auto">

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உலர் உணவு பொதி வழங்கல் நிகழ்சித்திட்டம்

சாவகச்சேரி பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான 500,000.00 ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உலர் உணவு பொதி வழங்கல் நிகழ்சித்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் 08.04.2024 ம் திகதியன்று முதற்கட்டமாக சாவகச்சேரி பிரதேச சபையின் கச்சாய் உப அலுவலக எல்லைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணிகளுக்கு உலர்உணவு பொதி எமது அலுவலக மாநாட்டு மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.        

சாவகச்சேரி பிரதேசசபையின் உள்ளூராட்சி தின நிகழ்வு (2024.03.28)

சாவகச்சேரி பிரதேசசபையின் 2023 ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தின நிகழ்வு 2024.03.28 மாலை 2.00 மணிக்கு   நட்சத்திர மஹால் திருமண மண்டபத்தில் சாவகச்சேரி பிரதச சபையின் செயலாளர் க.சந்திரகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.   இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.கி .கமலராஜன், வலயக்கல்வி பணிப்பாளர் தென்மராட்சி அவர்ககளும், சிறப்பு விருந்தினர்களாக வைத்தியர் சி.சுதோகுமார், சுகாதார வைத்திய அதிகாரி சாவகச்சேரி மற்றும் திரு.ப.பார்த்தீபன் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வட மாகாணம் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.ஆ.தங்கவேலு, அதிபர் - வரணி மத்திய கல்லூரி அவர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் போது உள்ளூராட்சி தினத்தை முன்னிட்டுநடைபெற்ற சனசமூக நிலையங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் பங்கு வெற்றி ஈட்டிய சனசமூக நிலையங்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டதுடன் விளையாட்டு நிகழ்வுகளில் வளவாளராக செயற்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வரியா மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கபட்டது.

2024ம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வு 26.03.2024

சாவகச்சேரி பிரதேச சபையும் கைதடி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியமும் இணைந்து நடாத்திய   2024ம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வு 26.03.2024 ம் திகதியன்று கைதடி அன்னை இரத்தினம் மணி மண்டபத்தில் பி.ப 2.00 அளவில் இடம்பெற்றது.   இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி.சுதாகர் கனிஸ்ரா, மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக  திருமதி தயாசக்தி பாலசுப்ரமணியம், அதிபர் சாவகச்சேரி மகளிர் கல்லூரி., மற்றும் கௌரவ விருந்தினர்களாக வைத்தியர் ஜெயதர்சினி சத்துருக்கன் , ஆயுர்வேத வைத்தியர் சாவகச்சேரி பிரதேசசபை, மற்றும் இ.கந்தசாமி, தலைவர் சன சமூக நிலையங்களின் ஒன்றியம், கைதடி அவர்களும் கலந்து சிறப்பித்தனர் இவ் நிகழ்வின் பொது  சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

வடக்கு மாகான உள்ளூராட்சி மன்றங்களின் இணையதள அங்குராப்பண நிகழ்வு 03.01.2024

சாவகச்சேரி பிரதேசசபை உட்பட்ட வடக்கு மாகாணத்தின் 34 உள்ளூராட்சி மன்றங்களின் இணையத்தளங்கள்  01.03.2024ம் திகதி  காலை 10.00 மணிக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்
திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
https://chavakachcheri.ps.gov.lk எனும் இணைப்பில் சாவகச்சேரி பிரதேச சபை இணையத்தளத்தை பார்வையிடலாம். இவ் இணைய தளத்தின் ஊடாக எமது சபை தொடர்பான தகவல்கள்,  வரவுசெலவு திட்ட அறிக்கைகள் , அறிவித்தல்கள், உப அலுவலகங்கள்  மற்றும் சேவைகள் தொடர்பான விபரங்ளை பெற்று கொள்ளலாம்.
 
இவ் இணையத் தளத்தை சிறப்புற வடிவமைத்த எமது சபையின் அபிவிருத்தி அலுவலர்கள் பிரதம செயலாளரால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இவ் இணையத்தள உருவாகத்திற்கு அனுசரனை வழங்கிய CDLG திட்ட குழுவினருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

2024ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு

2024ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு இன்று சாவகச்சேரி பிரதேச சபையின்  செயலளார் தலைமையில் தலைமை அலுவலகத்தில்  சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கொடிகாமம் இலங்கை வங்கி  முகாமையாளர்  மற்றும்  அலுவலர்களும் கலந்து சிறப்பித்தனர்.      

சேவைநலன் பாராட்டு விழா திரு. ஆறுமுகம் சோமஸ்கந்தமூர்த்தி

சாவகச்சேரி பிரதேச சபையில் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற திரு.ஆறுமுகம் சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் இன்று (2024.02.16)  நலன்புரிச் சங்க அங்கத்தவர்களால் சிறப்புற கௌரவிக்கப்பட்டார்.  எமது  சபையில் நியமனம் பெற்று பல பதவிகள் வகித்து தனது வாழ்க்கை காலத்தை பிரதேச சபைக்கு என அர்ப்பணித்த சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் சேவை நிறைவில்  வரணி பொது நூலகத்தில் நூலக உதவியாளராக சேவை ஆற்றினார்.இவர் ஓய்வு பெற்றுச் சென்றாலும் பிரதேச சபையின் வளர்ச்சியில் அக்கறையுள்ள இவ் அலுவலரின் ஓய்வு காலம் சிறக்கவும் நலத்துடன் வாழ்வும் வாழ்த்துகின்றது பிரதேச சபை..

வாழிய நீடூழி...
 

முச்சக்கர வண்டி சங்கத்தில் பதிவு செயப்பட்ட சாரதிகளுக்கான பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

சாவகச்சேரி பிரதேச சபையின் புத்தூர்சந்தி முச்சக்கர வண்டி சங்கத்தில் பதிவு செயப்பட்ட சாரதிகளுக்கான பொதுக்கூட்டம் இன்று 14.02.2024ம் திகதியன்று எமது சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சபையின் செயலாளர் தலைமையில் Assistant Superintendent of Police, Kodikamam Police Station, கொடிகாமம ் பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் போன்றோர் பங்குபற்றினர்.  

ஐங்கரன் முன்பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இன்று (25.01.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது

சாவகச்சேரி பிரதேசசபையின் கீழ் அல்லாரை பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த ஐங்கரன் முன்பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இன்று (25.01.2024) தைப்பூச நல்நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நவீன முறையிலான கற்பித்தல் நுட்பங்களுடன் மிகச்சிறந்த கிராமிய இயற்கை சூழலில் ஆரம்பக்கல்வி ஆரம்பித்து வைக்ப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வில் தென்மராட்சி கல்வி வலய முன்பள்ளி களின் இணைப்பாளர். திருமதி. ரா. மயில்வாகனசிங்கம், போக்கட்டி அ. த. க பாடசாலை அதிபர் திரு. தி. அபராஜிதன், அல்லாரை அ. த. க பாடசாலை உப அதிபர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை அலுவலர்கள் பொதுமக்கள் மழலைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சமய நிகழ்வின் பின்னர் விருந்தினர்களால் கட்டிடம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வரவேற்பு நடனம் நடைபெற்றதுடன் அனைவரின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.
இதன்பின்னர் ஏடு தொடக்கல் நிகழ்வும் இனிதே நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட மழைலைகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.