ஐங்கரன் முன்பள்ளி சிறுவர்களின்  சிறுவர் சந்தை நிகழ்வு  19.07.2024

எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளி சிறுவர்களின்  சிறுவர் சந்தை நிகழ்வானது 19.07.2024 ம் திகதியன்று காலை  9.30 மணிக்கு    முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றதுடன்   எமது சபையின் செயலாளர் அவர்களால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்நிகழ்விற்கு  ஐங்கரன் சனசமூக நிலைய தலைவர்,  கொடிகாமம் தேசிய சேமிப்பு வங்கி உத்தியோகத்தர்கள்,  அல்லாரை அரசினர்  தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள்  மற்றும் சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்

ஆடிப்பிறப்பு நிகழ்வும் கலை கலாசார நிகழ்வும் – 18.07.2024

சாவகச்சேரி பிரதேசசபையின் ஆடிப்பறப்பு நிகழ்வும் கலை கலாசார நிகழ்வும்  18.07.2924ம் திகதியன்று கொடிகாமம்  நட்சத்திரமஹால்  மண்டபத்தில் பி.ப 2.00 மணிக்கு சபையின் செயலாளர் திரு.க.சந்திரகுமார் தலைமையில்  இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு  பிரதம விருந்தனராக திருமதி. லாகினி நிருபராஷ், பணிப்பாளர் , பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களும் சிறப்புவிருந்தினராக  திரு. இராமநாதர் சர்வேஸ்வரன் , உதவி திட்ட பணிப்பாளர், பிரதேசசெயலகம் தென்மராட்சி அவர்களும் கெளரவ விருந்தினர்களாக திரு. திருநாவுக்கரசு அபராஜிதன், அதிபர் - போக்கட்டி அ.த.க.பாடசாலை மற்றும் திரு. கந்தையா மயில்வாகனம், கந்தையா கனகம்மா நிதியம் , நாவற்குழி அவர்களும்  கலந்து சிறப்பித்தனர். மேலும்  சாவகச்சேரி நகரசபை செயலாளர் , உத்தியோகத்தர்கள்,கொடிகாமம் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் ,  மதகுருமார்கள், பாடசாலை மாணவர்கள் , அதிபர்கள், பெற்றோர்கள் , எமது சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்   யா/ வரணி மத்திய கல்லூரி மாணவர்களின் கத்தாவராயன் கூத்து சிறப்பாக இடம்பெற்றதுடன்  அந் நிகழ்வுகளை ஆற்றுகை்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள்   கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் எமது சபை எல்லைக்குள் உட்படட  சிறந்த எழுத்தாளர்கள் ,  கலைஞர்கள்  மற்றும் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட் டனர் .
 எமது சபையின்  வறி ய மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவுசெய்யயப்படட  பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கி  வைக்கப்படடன.

LDSP திட்டத்தின் கீழ் 11 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்  கட்டப்பட்ட கடைத்தொகுதி  திறப்பு விழா  வைபவம் 28.06.2024

சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி உப அலுவலக எல்லைக்குட்பட்ட கைதடி சந்தியில் LDSP திட்டத்தின் கீழ் 11 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்  கட்டப்பட்ட கடைத்தொகுதி  திறப்பு விழா  வைபவம் சாவகச்சேரி  பிரதேச சபையின் செயலாளர் தலைமையில்  இன்றைய தினம் 28.06.2024 ம் திகதியன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
பிரதம விருந்தினராக திரு. இ.இளங்கோவன், பிரதம செயலாளர், வடக்கு மாகாணம்  அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக
திரு.செ.பிரணவநாதன், செயலாளர் உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாணம் மற்றும்  திருமதி தேவநந்தினி பாபு , உள்ளூராட்சி ஆணையாளர் வடக்கு மாகாணம் அவர்களும்  கலந்து சிறப்பித்துள்ளனர் .மேலும் இக்கடை தொகுதியை பொறுப்பேற்று கட் டட வேலைகளை பூர்த்தி செய்த ஒப்பந்தக்காரர்களான  Tecora Construction நிறுவனத்தினர் , சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி,  கடை தொகுதியை பொறுப்பெடுத்தத வர்த்தகர்கள், பாடசாலை மாணவர்கள், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
 
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட  திரு. இ.இளங்கோவன், பிரதம செயலாளர், வடக்கு மாகாணம்  அவர்கள் கடைதொகுதியை திறந்து வைத்ததர். சாவகச்சேரி பிரதேச சபையின் வறிய மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு  பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கடைத்தொகுதியை பெற்றுக்கொண்ட வர்த்தகர்களுக்கு கடைத்தொகுதிக்கான திறப்பு  உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
 

 

உலக சுற்று சூழல் தின கொண்டாட்டம் சாவகச்சேரி பிரதேச சபை- 06.06.2024

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு முன்னிட்டு மே 31 தொடக்கம் யூன் 05 வரையான காலப்பகுதியை சுற்று சூழல் வாரமாக பிரகடனப் படுத்தப்பட்டமைக்கு அமைவாக சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லைக்குட்பட உப அலுவலக ரீதியாக ஒவ்வொரு தொனிப் பொருளின் அடிப்படையில் உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்பட்டது

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு இறுதி நிகழ்வாக இன்றைய தினம் வன ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து மரம் நடுகை செயற்றிட்டமானது சரசாலை உப அலுவலக பகுதியிலும்  வரணி மத்திய கல்லூரி அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனும் இணைந்தும் மற்றும் கண்டி வீதியிலும் எமது சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள்ஊழியர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.

</p dir="auto">

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உலர் உணவு பொதி வழங்கல் நிகழ்சித்திட்டம்

சாவகச்சேரி பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான 500,000.00 ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உலர் உணவு பொதி வழங்கல் நிகழ்சித்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் 08.04.2024 ம் திகதியன்று முதற்கட்டமாக சாவகச்சேரி பிரதேச சபையின் கச்சாய் உப அலுவலக எல்லைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணிகளுக்கு உலர்உணவு பொதி எமது அலுவலக மாநாட்டு மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.        

சாவகச்சேரி பிரதேசசபையின் உள்ளூராட்சி தின நிகழ்வு (2024.03.28)

சாவகச்சேரி பிரதேசசபையின் 2023 ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தின நிகழ்வு 2024.03.28 மாலை 2.00 மணிக்கு   நட்சத்திர மஹால் திருமண மண்டபத்தில் சாவகச்சேரி பிரதச சபையின் செயலாளர் க.சந்திரகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.   இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.கி .கமலராஜன், வலயக்கல்வி பணிப்பாளர் தென்மராட்சி அவர்ககளும், சிறப்பு விருந்தினர்களாக வைத்தியர் சி.சுதோகுமார், சுகாதார வைத்திய அதிகாரி சாவகச்சேரி மற்றும் திரு.ப.பார்த்தீபன் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வட மாகாணம் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.ஆ.தங்கவேலு, அதிபர் - வரணி மத்திய கல்லூரி அவர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் போது உள்ளூராட்சி தினத்தை முன்னிட்டுநடைபெற்ற சனசமூக நிலையங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் பங்கு வெற்றி ஈட்டிய சனசமூக நிலையங்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டதுடன் விளையாட்டு நிகழ்வுகளில் வளவாளராக செயற்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வரியா மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கபட்டது.

2024ம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வு 26.03.2024

சாவகச்சேரி பிரதேச சபையும் கைதடி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியமும் இணைந்து நடாத்திய   2024ம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வு 26.03.2024 ம் திகதியன்று கைதடி அன்னை இரத்தினம் மணி மண்டபத்தில் பி.ப 2.00 அளவில் இடம்பெற்றது.   இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி.சுதாகர் கனிஸ்ரா, மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக  திருமதி தயாசக்தி பாலசுப்ரமணியம், அதிபர் சாவகச்சேரி மகளிர் கல்லூரி., மற்றும் கௌரவ விருந்தினர்களாக வைத்தியர் ஜெயதர்சினி சத்துருக்கன் , ஆயுர்வேத வைத்தியர் சாவகச்சேரி பிரதேசசபை, மற்றும் இ.கந்தசாமி, தலைவர் சன சமூக நிலையங்களின் ஒன்றியம், கைதடி அவர்களும் கலந்து சிறப்பித்தனர் இவ் நிகழ்வின் பொது  சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

வடக்கு மாகான உள்ளூராட்சி மன்றங்களின் இணையதள அங்குராப்பண நிகழ்வு 03.01.2024

சாவகச்சேரி பிரதேசசபை உட்பட்ட வடக்கு மாகாணத்தின் 34 உள்ளூராட்சி மன்றங்களின் இணையத்தளங்கள்  01.03.2024ம் திகதி  காலை 10.00 மணிக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்
திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
https://chavakachcheri.ps.gov.lk எனும் இணைப்பில் சாவகச்சேரி பிரதேச சபை இணையத்தளத்தை பார்வையிடலாம். இவ் இணைய தளத்தின் ஊடாக எமது சபை தொடர்பான தகவல்கள்,  வரவுசெலவு திட்ட அறிக்கைகள் , அறிவித்தல்கள், உப அலுவலகங்கள்  மற்றும் சேவைகள் தொடர்பான விபரங்ளை பெற்று கொள்ளலாம்.
 
இவ் இணையத் தளத்தை சிறப்புற வடிவமைத்த எமது சபையின் அபிவிருத்தி அலுவலர்கள் பிரதம செயலாளரால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இவ் இணையத்தள உருவாகத்திற்கு அனுசரனை வழங்கிய CDLG திட்ட குழுவினருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

2024ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு

2024ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு இன்று சாவகச்சேரி பிரதேச சபையின்  செயலளார் தலைமையில் தலைமை அலுவலகத்தில்  சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கொடிகாமம் இலங்கை வங்கி  முகாமையாளர்  மற்றும்  அலுவலர்களும் கலந்து சிறப்பித்தனர்.      

சேவைநலன் பாராட்டு விழா திரு. ஆறுமுகம் சோமஸ்கந்தமூர்த்தி

சாவகச்சேரி பிரதேச சபையில் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற திரு.ஆறுமுகம் சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் இன்று (2024.02.16)  நலன்புரிச் சங்க அங்கத்தவர்களால் சிறப்புற கௌரவிக்கப்பட்டார்.  எமது  சபையில் நியமனம் பெற்று பல பதவிகள் வகித்து தனது வாழ்க்கை காலத்தை பிரதேச சபைக்கு என அர்ப்பணித்த சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் சேவை நிறைவில்  வரணி பொது நூலகத்தில் நூலக உதவியாளராக சேவை ஆற்றினார்.இவர் ஓய்வு பெற்றுச் சென்றாலும் பிரதேச சபையின் வளர்ச்சியில் அக்கறையுள்ள இவ் அலுவலரின் ஓய்வு காலம் சிறக்கவும் நலத்துடன் வாழ்வும் வாழ்த்துகின்றது பிரதேச சபை..

வாழிய நீடூழி...